சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட நான்கு தொலைபேசிகள்!

mahara prison sri lanka
mahara prison sri lanka

மஹர சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட நான்கு தொலைபேசிகள் மற்றும் புகையிலை பொதிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை பாதாள உலகக் குழு உறுப்பினராக கருதப்படும் ரத்கம விதுர எனும் நபருடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹிக்கடுவ பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ரி 56 வகை இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.