போக்குவரத்து விதிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானம்!

Traffic
Traffic

போக்குவரத்து விதிமுறைகளை நாளை மறுதினம் முதல் மீண்டும் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வீதி விதிமுறைகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய காலி வீதி அதிவேக பாதைகள் உள்ளிட்ட பல பாதைகளை மையப்படுத்தி இந்த நடைமுறை முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.