மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் பெற்ற ஜனாதிபதி!

625.500.560.350.160.300.053.800.900.160.90 16
625.500.560.350.160.300.053.800.900.160.90 16

நாட்டிற்கு ஏற்ற புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மக்கள் பெரும்பான்மையை வழங்கியுள்ளதாக பௌத்த மகா சங்க சபை குறிப்பிட்டுள்ளது.

படிப்படியாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதன் மூலம் தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதியின் குறித்த பயணம் அமையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சபை சுட்டிகாட்டியுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க அனுராதபுரத்தில் உள்ள விகாரைகளுக்கு ஜனாதிபதி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது மகா சங்கத்தினரிடம் ஆசிர்வாதம் பெற்ற பின்னர் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே மகா சங்க சபையினர் இந்த கருத்துக்களை முன்வைத்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.