மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் குழியில் புதைந்து பலி!

7 3 620x330 5
7 3 620x330 5

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஸ்கெலியா, பிரவுன்ஸீக் தோட்டத்தில் குழியில் புதைந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று 13 காலை இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த போதே குறித்த குழியில் மண் சரிந்து மரணமடைந்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளன.

உயிரிழந்த நபர் பிரவுன்ஸீக் தோட்டத்தை சேர்ந்த ராமய்யா அமில சந்தருவான் வயது 29 என அடையாளம் காட்டப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.