மேலும் 15 பேருக்கு கொரோனா

images 4
images 4

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,219ஆக உயர்வடைந்துள்ளது .

கட்டார், உக்ரேன் , மாலைத்தீவு, எதியோபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பியவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும், கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 211 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, குறித்த தொற்றிலிருந்து 2,996 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.