ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பதுளை நகரில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 50மில்லிகிராம் அளவுடைய 100 பொதிகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பதுளை காவல்துறை வாகன போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த பொதிகளை சந்தேக நபர் பாதணிக்குள் வைத்து கொழும்பிலிருந்து பதுளைக்கு கொண்டு வந்திருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் 30 வயதுடைய பதுளை கட்டுபெலெல்லகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.