பூசா சிறைச்சாலை கைதிகளின் போராட்டம் கைவிடப்பட்டது!

b60cf
b60cf

பூசா சிறைச்சாலையில் கைதிகள் 45 பேர் உணவுத்தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.

இன்று (14) முற்பகல் குறித்த கைதிகள் தமது போராட்டத்தை கைவிட்டு உணவினை பெற்றுக்கொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகளை இலகுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 45 கைதிகளால் கடந்த 10 ஆம் திகதி உணவுத்தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த குழுவில் பாதாள உலகக்குழுக்களின் உறுப்பினர்களான பொடி லெசி, கொஸ்கொட தாரக, கஞ்சிபானை இம்ரான் மற்றும் வெலே சுதா ஆகியோரும் உள்ளடங்குதாக தெரிவிக்கப்படுகிறது.