வடக்கிற்கு வருகிறார் விவசாயத்துறை அமைச்சர் ஏன் தெரியுமா!

73dd78f4f8
73dd78f4f8

வட மாகாண விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே நாளை(15) வடக்கிற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இதற்கமைய, அச்சுவேலி , யாழ்ப்பாண- மாவட்ட செயலகம், விடத்தற்பளை, கிளிநொச்சி, திருவையாறு மற்றும் இரணைமடு ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராயவுள்ளார்.

மேலும், கால்நடை வளர்ப்பு, வாழை மற்றும் கிழங்கு பயிர்ச்செய்கை தொடர்பில் ஆராய்வதற்காக நீர்வெலி மற்றும் அச்சுவேலி ஆகிய பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.