மதுபானம் அருந்திய பாடசாலை மாணவிகள் கைது!

398038 346415 beer getty
398038 346415 beer getty

மத்திய மாகாணத்தின் மதவாச்சி பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11 தரத்தில் பயிலும் மூன்று மாணவிகள் மதுபானம் அருந்திக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதவாச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்று அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து மாணவிகள் எச்சரிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த மாணவிகள் மதவாச்சியில் உள்ள விகாரை ஒன்றில் நடத்தப்படும் தனியார் வகுப்பில் கலந்துக்கொள்ளவதற்காக வந்த போது, தண்ணீர் போத்தல்களில் பியர் மது பானத்தை எடுத்து வந்து அருந்திக்கொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவிகள் நீண்டகாலமாக மதுபானத்திற்கு அடிமையாகி இருப்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.