20 ஆவது அரசியலமைப்பு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்

1600137288 amendment 2
1600137288 amendment 2

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவின் தீர்மானங்கள் இன்று (15) ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை நாளைய தினம் (16) அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 9 பேர் உள்ளடங்குவதாக முறிப்பிடப்பட்டுள்ளது.