சீஷெல்ஸிலிருந்து நாடு திரும்பிய 170 இலங்கையர்கள்!

tr6ftg
tr6ftg

உலகம்முழுவதையும் தாக்கிய கொரோனாதொற்றின் காரணமாக சீஷேல்ஸ் நாட்டில் சிக்கித்தவித்திருந்த170 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சீஷேல்ஸ் நாட்டில் இருந்து ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-708 எனும் விமானம் ஊடாக குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது .