வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த வவுனியா தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு இன்று விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன் போது வவுனியா மாவட்டத்தில் முடிவடையாமல் உள்ள வீட்டுத்திட்டதிட்டங்கள் தொடர்பாகவும், வீடமைப்பு அதிகாரசபை அலுவலகர்கள், தொழில் நுட்ப உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாகவும், வீட்டுத்திட்டங்களிற்கு நிறுத்தி வைக்கப்பட்ட நிதி தொடர்பாக அமைைச்சருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
வவுனியா வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் திருமதி வி.எம்.வி.குரூஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கு.திலீபன், கே.கே.மஸ்தான், தெற்கு சிங்கள பிரதேசசபையின் உப தலைவர் வசந்த ராஜகருணா, மற்றும் வீடமைப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.