கடந்த 24 மணித்தியாலங்களில் போதைப்பொருட்களுடன் 429 பேர் கைது

6666
6666

கடந்த 24 மணித்தியாலங்களில் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 429 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 178 பேரும் மற்றும் கஞ்சா வைத்திருந்த 102 பேரும்
உள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

இதேவேளை, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான´ரெயில்பாரே சுமீர´ என்று அழைக்கப்படும் சுமீர மதுசங்க ஹேரோயின் போதைப்பொருளுடன் மாளிகாவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பாதாள உலக குழு உறுப்பினர் ஆர்மி சம்பத்தின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது .