நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களில் மேலும் ஐவர் குணமடைந்து இன்று(16) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதன்படி, வைரஸ் தொற்றிலிருந்து மீண்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 21ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மூவாயிரத்து 271 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதோடு அவர்களில் இன்னும் 237பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
மேலும். நாட்டில் இதுவரை 13 பேர் கொரோளா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.