வவுனியாவில் சர்வமத தலைவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

DSC04369
DSC04369

வவுனியாவில் சர்வமத தலைவர்களிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு ஒன்று மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று(16) இடம்பெற்றது.

தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன், கிராமிய அபிவிருத்திச் நிறுவனத்தின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட சர்வமத தலைவர்கள் மற்றும் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சமாதானமான முறையில் சமகால மத, இன முரண்பாடுகளை களைவதும், எதிர்காலத்தில் அரசியல் தலைவர்களுடன் இணைந்து இன மத நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் நடவடிக்கையாக இக்கலந்துரையாடல் அமைந்திருந்தது.

அத்துடன் சிறிய இன, மத முரண்பாடுகளை வளரவிடாது ஆரம்பத்திலேயே களைவது மற்றும் அரசியல்வாதிகள் மதம் சார்ந்த விடயங்களை கையிலேடுத்து அரசியல் செய்வதை தடுப்பது போன்ற விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டதுடன் தொடர்ந்து சர்வமத தலைவர்கள் மற்றும் அரசியல் தலைமைகள் சந்திப்புக்களை மேற்கொண்டு இன,மத நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், கு.திலீபன், காதர் மஸ்தான், மதத்தலைவர்கள், அரசசார்பற்ற நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.