அமெரிக்க தூதுவருக்கும் மின்சார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு!

1600254963 ceb 2
1600254963 ceb 2

இலங்கை பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் டீசல் எரிபொருள் மூலம் இயங்கும் மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு மாறாக நிலைபெறுதகு வலு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபிட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய மின்சார அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் மின்சார அமைச்சினால் இயங்குவதற்குள்ள தேசிய மின்சார திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா தயாராகிவுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்கா நாட்டுத் தூதுவர் அலைநா பீ டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இரு நாட்டு ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்தை மையமாகக்கொண்டு நடைபெற்று கலந்துரையாடளின் போதே அவர் இவ்வாறு கூரியுள்ளார்.

தேசிய மின்சார தயாரிப்புக்காக நிலைபெறுதகு வலு சக்தியின் பயன்பாட்டை 70% வீத்தால் அதிகரிக்க செய்வதற்கும் டீஸல் எறிபொருளின் பயன்பாட்டை 5% வீதம் வரை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதோடு தற்போது இருக்கும் நிலைபெறுதகு வலங்களை அபிவிருத்தி செய்வதற்காகவும் திட்டமிட்டுள்ளதாகவும் மின்சார அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மின்சார துறையை அபிவிருத்தி செய்வதற்காகவும் நாட்டுக்குள் புது நிலைபெறுதகு வல திட்டங்களுக்காக முதழீடு செய்வதற்கும் தமது நாட்டு முதழீட்டாளர்கள் ஊக்குவிப்பு செய்யப்படவுள்ளனர் என்பதையும் அமெரிக்க தூதுவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அமேரிக்க நாட்டின் பொருளாதார பிரிவுத் தலைவர் சூசன். எப். வோக் உம் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.