51 ஜெலிக்னைட் மருந்து பொருட்களை வைத்திருந்த இருவருக்கு விளக்கமறியல்!

1622909972Reman 2
1622909972Reman 2

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி 51 ஜெலிக்னைட் மருந்து பொருட்களை வைத்திருந்த இருவரை இம்மாதம் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று 16 உத்தரவிட்டுள்ளார்.

ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 50 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் வீட்டு வளவினுள் 51 ஜெலிக்னைட் குச்சிகள், 3 திரி, 1 கைவாள் போன்ற பொருட்களை புதைத்து வைத்திருந்த நிலையில், குச்சவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கைகள் மூலம் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் மீன் பிடிப்பதற்காக இவ் சட்டவிரோத பொருட்களை வைத்திருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை பொலிஸார், திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.