ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள வேண்டாம் என அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.