யாழ்.மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு யாழ்.மாவட்ட செயலக பொதுமக்கள் சந்திப்பு காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அங்கஜன் இராமநாதன்,
20 ஆவது சீர்திருத்தம் சம்பவமாக அதாவது 19 ஆவதை மாற்றுவது தொடர்பாக மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. அனேகமான மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுத்தது 19 ஐ மாற்றச் சொல்லியே.கடந்த காலத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாமல் அதிகாரப் பிரச்சினை இருந்தது.பிரதமர்- ஜனாதிபதி பிரச்சினை. 19, 20 ஆகியவற்றை கொண்டுவந்தது யார் என்பதற்கு அப்பால் மாற்றவேண்டும் என்பதே நிலைப்பாடு. காணாமல் போனவர்களின் குடும்பங்களை சமூகத்துடன் இணைக்க வேண்டிய வேலைத்திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்களது நிலைப்பாடு, அதற்காக அரசுக்கு ஊக்கத்தை கொடுப்பது என்னுடைய நிலைப்பாடு. வேலை வாய்ப்புகளால் எனக்கு வாக்குக் கிடைத்தது என்பது பொய். ஆனால் வேலைவாய்பைபெற்றுக்கொடுக்க வேண்டியதேவை எனக்கு இருக்கிறது.