திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்கள்!

hospital
hospital

பன்னிபிட்டி பகுதியில் 16 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் சற்று முன்னர் இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பன்னிபிட்டி பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 8 ஆம் வகுப்பை சேர்ந்தவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் ரெட்பார்ம் என அறியப்படும் ஒருவகை காய் இனை பறித்து விளையாடிக்கொண்டிருக்கையில் குறித்த காய் உடம்பில் பட்டதை தொடர்ந்தே அவர்கள் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த 16 மாணவர்களும் தற்பொழுது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.