கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 22 பேர் குணமடைந்து இன்று (17) வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 43ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் இலங்கையில் இதுவரையில், 3 ஆயிரத்து 271 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 3 ஆயிரத்து 43 பேர் தொற்றில் இருந்து பூரணமாகக் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 215 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அதேநேரம், இந்த தொற்று காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.