மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!

baby 34 jpg 710x400xt
baby 34 jpg 710x400xt

மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிசுவின் தாயார் சந்தேகத்தின் பேரில் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

பிறந்து நாற்பது நாள் கொண்ட பெண் பிள்ளையான கோஷனி என்ற சிசுவே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளது.

கடந்த 15ம் திகதி இரவு மட்டக்களப்பு வன்னியார் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றில் இருந்து சடலமாக 42 நாள் கொண்ட கோஷனி என்;ற சிசு சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பான விசாரiணைகளை மட்டு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹாட்டியாராச்சியின் ஆலோசனைக்கமைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு சப் இன்பெஸ்டர் எம்.ஜீ.பி.எம். முகமட் ஜிசூ தலைமையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ரி.கிருபாகரன் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் குறித்த தாயாரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த தாயே தன்னுடைய குழந்தையை கொன்றது பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதனையடுத்து குறித்த தாயாரை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.