மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலைகாரணமாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை பகுதியில் மண்மேடு ஒன்றுடன் மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் ஹட்டன் – கொழும்பு, ஹட்டன் – கண்டி மற்றும் நாவலபிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
இதேவேளை, குறித்த மரத்தினை அகற்ற பொலிஸார் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் நடவடிக்கையின் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பெய்துவரும் கடும் மலையின்காரணமாக கெனியன் மற்றும் லக்ஸபான ஆகிய நீர்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.