மன்னாரில் மஞ்சள் கட்டிகளுடன் ஒருவர் கைது!

3 3
3 3

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகாமையில் உள்ள கடல் பகுதியில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை(18) இரவு படகு ஒன்றிணுள் வலைகளுக்குள் மறைத்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி மஞ்சள் கட்டிகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளதோடு,மன்னார் எழுத்தூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டிகள் சுமார் 305 கிலோ 400 கிராம் எடை கொண்டது என மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

1 24
1 24

புலனாய்வு தகவலுக்கு அமைவாக மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்க, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கஸ்தூரி ஆராட்சி ஆகியோரின், அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிருசாந்தனின் வழிகாட்டலுக்கு அமைவாக விரைந்து செயல் பட்ட மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் குறித்த மஞ்சள் கட்டிகளை மீட்டுள்ளனர்.

2 9
2 9

இதன் போது மன்னார் எழுத்தூரை சேர்ந்த 50 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் கட்டி மூடைகள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கைது செய்யப்பட்ட நபரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.