ரணிலுக்கு அழைப்பு விடுக்கிறார் -சஜித்

download 7
download 7

புதிய கூட்டணியில் இணைந்துகொள்ளவும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிடுவதற்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் இந்த அழைப்பினை விடுத்த அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த செய்தி ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளது எனக் கூறினார்.

“ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில் இணைந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுக்கின்றோம். இரு கட்சிகளும் ஒரு கூட்டணியின் பங்காளிகளாக மாறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டால் இரு கட்சிகளும் மாகாண சபை தேர்தலில் ஒன்றாக போட்டியிட முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார் .