தாவுத் உணவகம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் விவாதம் !

IMG20200918105352 1
IMG20200918105352 1

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இஸ்லாமியர் ஒருவரால் நடாத்தப்படும் தாவுத் உணவகம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் நீண்ட விவாதம்

வவுனியா வடக்கு பிரதேசத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் கு.திலீபன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கனகராயன்குளம் பகுதியில் அமைந்துள்ள தாவுத் உணவகம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.

IMG20200918105254
IMG20200918105254

இது தொடர்பாக கருத்து தெரிவித்த வடக்கு பிரதேச சபை தவிசாளர் இ.தணிகாசலம் 2018 ஆம் ஆண்டிலிருந்து குறித்த உணவகம் அனுமதியற்று இயங்கிவருகின்றது. காணிக்கான உரித்து தொடர்பான பத்திரம் அல்லது அதனை வாடகைக்கு பெற்றிருந்தால் அதன் உரிமையாளரின் சம்மத கடிதம், மற்றும் கட்டட அனுமதி போன்ற விடயங்களை வழங்கினாலே சபையினால் அதற்கான அனுமதி வழங்க முடியும்.

IMG20200918105138 1 1
IMG20200918105138 1 1

ஆனால் அது எதுவும் இல்லை.இவற்றை மையப்படுத்தி பிரதேச சபையால் நீதி மன்றில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. சில விடயங்கள் அதில் இணைக்கப்படாமையினால் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரமே சபையால் உணவகத்தை மூடமுடியும்எனவே நாம் மீண்டும் வழக்கொன்றை தாக்கல் செய்யவுள்ளோம் என்றார்.

அத்துடன் குறித்த உணவகத்தை சபையின் செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிசகிதம் கடமை நிமித்தம் ஒருமுறை நாம் பார்வையிட்டபோது தமது உணவகத்திற்குள் அத்துமீறி நுளைந்ததாக பொலிசில் முறைப்பாடு அளித்தநிலையில் எம்மீது விசாரணைகளும் இடம்பெற்றிருந்தது.எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த சுகாதாரபரிசோதகர், குறித்த உணவகத்தில் உணவுச்சட்டத்தின் கீழ் அனுமதியற்ற முறையில் வியாபாரம் செய்தல் என்ற விடயத்தை முன்வைத்து 2018 ஆம் ஆண்டு நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்தோம். அதற்கமைய உணவகத்தை நடாத்த நீதிமன்றால் இடைக்கால தடை அவருக்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அவரது சட்டத்தரணிகளின் கோரிக்கைக்கமைய நீதிமன்றால் உணவகம் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டதுதற்போது வழக்கு இடம்பெற்று வருகின்றது எமது கடமையை நாம் செய்கிறோம்.என்றார்.


குறித்த உணவகத்தினுடன் தொடர்புடைய வகையில் மூன்று வழக்குகள் வவுனியா நீதிமன்றில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதுஇது தொடர்பாக நீதிமன்றின் நடவடிக்கைகளை நாம் பார்ப்பதுடன் இவ்விடயத்தை நான் அப்படியே விட்டுவிடப்போவதில்லை ஒருங்கிணைப்பு குழு தலைவர் கு.திலீபன்தெரிவித்தார்.

IMG20200918105342
IMG20200918105342