ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் நாடாளுமன்ற பொது முயற்சியாண்மைக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை அரச கணக்குக் குழுவின் முதலாவது கூட்டம் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
குறித்த இரு தினங்களிலேயும் கூட்டம் 2.30 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது குறித்த குழுக்களுக்கான தலைவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆம் திகதி மக்கள் மனுக்கள் தொடர்பான குழு ஒன்று கூடவுள்ளதுடன் அன்றைய தினம் அதன் தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.