குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள்!

kulavi
kulavi

ஹப்புத்தளை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 8 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் தேயிலை தோட்டத்தில் பணியாற்றிய போதே அவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் ஹப்புத்தளை – பங்கெட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.