உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் 27 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய, சேவை அவசியம் காரணமாக இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.