வாகனத்தை மது போதையில் செலுத்திய 249 பேர் கைது!

1600525598 drunk drivers arrested 2
1600525598 drunk drivers arrested 2

நாடு முழுவதும் நேற்றிரவு 8 மணிமுதல் இன்று அதிகாலை 4 மணி வரையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 249 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏனைய வாகன குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூவாயிரத்து 106 பேர் உட்பட மூவாயிரத்து 355 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் 249 வாகனங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.