28 இலங்கையர்கள் கொரோனாவால் சவுதி அரேபியாவில் பலி!

1508996987 4445592 hirunews fdfefe 1
1508996987 4445592 hirunews fdfefe 1

குடும்ப வறுமை காரணமாக தொழில் தேடி சவுதி அரேபியாவுக்கு சென்ற இலங்கையர்களில் 28 பேர் கொரோனா எனும் கொடிய நோயினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைக்கான தூதரக வட்டாரங்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கடந்த 04 மாதங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், இவர்களில் இரண்டு வீட்டுப் பணிப்பெண்களும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் அந்நாட்டினதும், சர்வதேச சட்டத்தின்படியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.