நாளை முதல் வீதி ஒழுங்கை நடைமுறையினை கொழும்பு மாவட்டத்தில் முழுமையான அமுல்ப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாண போக்குவரத்திற்கு பொறுப்பான மற்றும் மாநாகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் காவற்துறை அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த வீதி ஒழுங்கை நடைமுறையினை மேலும் விஸ்த்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.