கண்டி – பூவெளிக்கடை பகுதியில் உள்ள 5 மாடிக்கட்டிடம் ஒன்று தாழிறங்கியுள்ள நிலையில், அதில் இருந்து மீட்கப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்டிடத்தில் சிக்கியிருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, கட்டிடத்தில் சிக்கிய இருவரை காணவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.