கண்டி மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணி புறக்கணிப்பு!

66
66

கண்டியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பணிப்பகிஷ்கரிப்பானது நண்பகலுடன் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் உள்ள மெனிகின்னா வைத்தியசாலையின் தலைமை வைத்திய அதிகாரி மீது பிராந்திய அரசியல்வாதி ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கூறியே இந்த பணிப்பகிஷ்கரிப்பினை அவர்கள் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.