பொகவந்தலாவ – சீனாகலை பூசாரி தோட்ட பகுதியில் இரண்டு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி இன்று(22) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் குறித்த பகுதியில் தொழிலில் ஈடுப்பட்டிருந்த போது இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவரும், வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவரும் பொகவந்தலாவை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதேவேளை, ஹப்புத்தளை தம்பேத்தன புதுக்காடு பகுதியில் 46 வயதான ஒருவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
அவர் இன்று முற்பகல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த போது அவர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவை மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.