20 ஐ ஆதரிப்பவர்கள் எதிர்காலத்தில் அதற்காக மன்னிப்புக் கோருவார்கள்- அடித்துக் கூறுகின்றது ஜே.வி.பி.

ae7a6b9efbc0ba6603532eb4a0547198 XL
ae7a6b9efbc0ba6603532eb4a0547198 XL

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்கும் மக்கள் பிரதிநிதிகள் எதிர்காலத்தில் அதற்காக மக்களிடம் மன்னிப்புக் கோருவார்கள்.”

– இவ்வாறு ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

20ஆவது திருத்தத்தால் முதலில் பாதிக்கப்படப் போகின்றவர்கள் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அதற்காகக்  கவலைப்படுவார்கள்.

ஓரிரு வருடங்களில் பொதுமக்களிடம் அதற்காக மன்னிப்புகி கோருவார்கள்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படும்போது அரசு தவறுக்காக வருந்தும்” – என்றார்.