கொழும்பில் சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீனப்பிரஜைகள் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளுபிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உரிமம் பெறாத சூதாட்டத்தில் ஈடுபட்டநிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒன்பது ஆண்கள் மற்றும் மூன்று பெண்கள் உள்ளடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சோதனையின் போது ரூபா 6.5 மில்லியன், ஒரு கணனி மற்றும் ஒரு தொலைக்காட்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கலால் துறை அதிகாரிகளுடன் காவல்துறையினர் நடத்திய சோதனையின் போதே சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.