பூஜித மற்றும் ஹேமசிறி மீதான விசாரணைகள் நிறைவு – குற்றப்புலனாய்வுத் திணைக்களம்

police 1 1
police 1 1

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தொடர்பான விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.