ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது!

arrest with drug heroin
arrest with drug heroin

கொழும்பின் சில பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சப்புகஸ்கந்த பொலிஸாரால் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து கிரிபத்கொட – ஹூனுப்பிட்டிய வீதி, எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

இதன் போது 230 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார்தெரிவித்துள்ளனர் .

பரண வத்த, மாபோல – வத்தளை பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்கிஸ்ஸ – ஹலுதாகொட குறுக்குத்தெரு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 3 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் அதே பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

மேலும், நுகேகொட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்புக்களில் ஹெரோயினுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 6 கிராம் 130 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. கனந்தபார – மிரிஹான பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பேலியகொடை பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் நுக வீதி, 90 ஆம் தோட்டத்திற்கு திரும்பும் பகுதியில் வைத்து 5 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயினுடன்ஒருவர் கைது செய்யப்பட்டார். பேலியகொடை பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .