நாட்டில் அமுலாகும் புதிய சட்டம்!

ds
ds

ஆபாச வெளியீடுகளை தடை செய்யும் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அண்மைய காலமாக சிறுவர்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆபாச வெளியீடுகள் பல்வேறு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படுவது மிக வேகமாக அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கான ஏற்பாடுகள் குற்றவியல் தண்டனை சட்டம் மற்றும் ஆபாச வெளியிடு தொடர்பான கட்டளைச் சட்டம் ஆகியவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் தற்போதை நிலைமையில் அந்த சட்டங்கள் போதுமானதாக இல்லை என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகவுள்ளது.

இதனால், இதற்கு தீர்வு காணும் வகையில் இலங்கை தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு என்பன சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய புதிதாக சட்டமூலம் ஒன்றை உருவாக்க தேவையான தகவல்கள் அடங்கிய ஆவணத்தை ஏற்கனவே தயாரித்துள்ளன.

இந்த ஆவணத்தை அடிப்படையாக கொண்டு புதிய சட்டமூலத்தை உருவாக்கும் ஆலோசனைகளை சட்ட வரைவு திணைக்களத்திற்கு வழங்கும் யோசனை ஒன்றை நீதியமைச்சர் அலி சப்றி முன்வைத்துள்ள நிலையில், அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.