காணி பிரச்சனைக்கு தீர்வினை வழங்குமாறு பெண் ஒருவர் போராட்டம்!

IMG 3032
IMG 3032

தனது மாமியாரால் வழங்கப்பட்ட காணியை மீண்டும் அவர் உரிமை கோருவதாகவும் எனவே அந்த காணியை மீட்டுத்தருமாறும் கோரி பெண் ஒருவர் வவுனியா பிரதேச செயலகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

குறித்த பெண் கருத்து தெரிவித்த போது…

தனது கணவனின் தாயாரால் வவுனியா கோவில் குளத்தில் நான்கு பரப்பு காணி கடந்த 2006ஆம் ஆண்டு எழுத்து மூலமாக வழங்கப்பட்டது.

தற்போது தனது கணவன் இறந்த நிலையில்  அந்த காணியை மீண்டும் அவர் உரிமை கோருவதுடன் 2010ஆம் ஆண்டு பொலிசாரின் பாதுகாப்புடன் வீட்டினையும் அமைத்துள்ளார்.

எனவே கணவன் இறந்த நிலையில் தனக்கு கிடைக்கவேண்டிய காணியை பெற்றுத்தருமாறு அவர் கோரிக்கை முன்வைத்ததுடன், தீக்குளிக்கபோவதாகவும் தெரிவித்தார்.

இதன்போது பதாதை ஒன்றை எந்தியபடி பை ஒன்றில் மண்ணெண்ணை போத்திலையும் அவர் வைத்திருந்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அவருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தியதுடன்,அவர் வைத்திருந்த மண்ணெண்ணை போத்திலை மீட்டதுடன் அவரை, பிரதேச செயலாளரிடம் அழைத்துச்சென்றனர்.

குறித்த காணி 1981ஆம் ஆண்டிலேயே அவரது மாமியாரின் பெயரில் பதியப்பட்டிருப்பதாக பிரதேச செயலாளர் இதன்போது தெரிவித்தார். 

இது தொடர்பாக சம்பந்தபட்ட மற்றய தரப்புடனும் கலந்துரையாடி இதற்கான தீர்வினை பரிசீலிக்கலாம் என அப்பெண்ணிடம் பொலிசாரும் உறிதியளித்த பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.