பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருட்களை விற்பனை செய்த ஓய்வூப்பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது!

202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF 6
202001232036454318 4 youths arrested in contractor murder case near tiruchuli SECVPF 6

மதுகம பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை பொருட்களை விற்பனை செய்த ஓய்வூப்பெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்ற விசாரணை பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடம் இருந்து கஞ்சா போதை பொருள் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, ஹெரோயின் போதை பொருள் விற்பனையாளரான அமில எனப்படும் ´கெப்பா´ என்பவர் நிட்டம்புவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

3 கிராமுக்கும் அதிக தொகை சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து வாள் ஒன்றும், காற்று துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.