38 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்:இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ

9c003038d74100aab9ff581f34bcf125 XL
9c003038d74100aab9ff581f34bcf125 XL

பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பொது மக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் அர்ப்பணித்திருப்பதாக நீர்ப்பாசன அமைச்சரும் உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதாக எதிர்கட்சி இன்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியது.

ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமன்ற உறுப்பினர் முத்திக பத்திரன இந்த குற்றச்சாட்டை இன்று முன்வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் தற்பொழுது 38 ஆயிரம் பொலிஸார் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், சில பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பு கடமைகளுக்கு பொலிஸார் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.