முகக்கவசம் அணிந்து செல்பவர்களை மட்டும் அனுமதிக்கும் வாடிக்கையாளர் சேவை நிலையம்!

வுனியாவிலுள்ள பிரபல்யமான தனியார் தொலைபேசி வாடிக்கையாளர்கள் சேவை நிலையத்திற்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி, முகக்கவசம் அணிந்து சேவைகளைப் பெற்றுச் செல்பவர்கள் மட்டும் உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் முகக்கவசம் அணியாமல் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் பொதுமக்களை திருப்பி அனுப்பி வருகின்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .

நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முழுமையாக இயல்பு நிலைக்கு செல்லவில்லை .

பாதுகாப்பு நடைமுறை சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியாவிலுள்ள பல்வேறு அரச தனியார் வங்கிகள், அரச திணைக்களங்களில் முகக்கவசம் அணிந்து செல்லாது; அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் கடமையாற்றி வருகின்றனர் .

இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்களும் கொரோனா அச்சம் இன்றி தமது வழமையான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் .

எனினும், வவுனியா நகரில் இரண்டாம் குறுக்கு தெருவிலுள்ள தனியார் தொலைபேசி வாடிக்கையாளர் சேவை நிலையத்திற்கு தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள செல்லும் பல பொதுமக்கள் முகக்கவசம் இன்றியே வருகை தருகின்றனர்.

இதனால், அங்கு பாதுகாப்பு கடமையிலுள்ள ஊழியர் முகக்கவசம் அணிந்து சென்றால் மட்டுமே உள்ளே சென்று சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர்.

இதனால், பல்வேறு கிராமங்களிலிருந்து தமது சேவைகளை பெற்றுக்கொள்ள செல்லும் பலர் முகக்கவசம் இன்றி செல்வதால் அவர்களை திருப்பி அனுப்புவதாகவும், தமக்கு பலவேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் . எனினும் பொதுவான பொதுமக்கள் நடைமுறைச் சட்டம் ஒன்றினை பேணியே குறித்த தனியார் தொலைபேசி வாடிக்கையாளர் சேவை நிலையம் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.