பெருந்தோட்ட பகுதிகள் உட்பட 5 மாகாணங்களில், ஆசிரிய உதவியாளராக இருந்து தமது தகமைகளை நிறைவு செய்துள்ளவர்களை ஆசியர்களாக உள்வாங்கி அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் குறிப்பிட்டுள்ளார்.
நிதி ஆணைக்குழுவின் செயலாற்று அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றில் இன்று இடம்பெற்றது.
இதில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட பகுதிகளிலுள்ள மருத்துவமனைகளில் காணப்படும் குறைப்பாடுகள் தொடர்பில் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.