வழமைக்குத் திரும்பிய கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியூடான போக்குவரத்து!

f679aa37feba7068f2aff106eec34a13 XL
f679aa37feba7068f2aff106eec34a13 XL

கினிகத்தேன – கொழும்பு பிரதான வீதியில் தடைபட்டிருந்த போக்குவரத்து சேவைகள் வழிம நிலைக்கு திரும்பியுள்ளது.

பிரதான வீதியில் ரம்பதெனிய பகுதியில் சரிந்துவிழுந்த பாரிய கற்பாறை நேற்று (24) மாலை அகற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவ்வீதி ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினரும், இராணுவத்தினரும் நேற்று காலை முதல் கற்பாறையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மாலை 5.15 மணியளவில் கற்பாறையும், மண்ணும் அகற்றப்பட்டது.

எனினும், சீரற்றகாலநிலை தொடர்ந்தால் மண்சரிவு ஏற்படும் அபாயமிருப்பதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.