சிறுத்தை புலி இறைச்சி விற்பனை செய்த 03 பேர் கைது!

leopard
leopard

உடதும்பர பகுதியில் புலியை கொலை செய்து அதன் இறைச்சியை விற்பனை செய்த 03 பேர் இன்று(25) கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடுதும்பர – கலல்கமுவ பிரதேசத்தில் பன்றி வேட்டைக்காக போடப்பட்டிருந்த பொறியொன்றில் குறித்த சிறுத்தை புலி சிக்கியுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பின்னர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பொறியில் சிக்கிய சிறுத்தையை கொலை செய்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சந்தேகநபரின் வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது சிறுத்தை புலியின் இறைச்சி மற்றும் உடற்பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்றைய தினம் (25) தெல்தெனிய நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.