கொழும்பில் நாளை இரவு முதல் 10 மணித்தியாலங்கள் நீர்வெட்டு

download 2 3
download 2 3

கொழும்பில் நாளை (26) இரவு முதல் 10 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி நாளை இரவு 8 மணி முதல் நாளைமறுதினம் காலை 6 மணி வரையில் கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 இற்கு உட்பட்ட பிரதேசங்களில் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு 11 பகுதியில் இந்தக் காலப்பகுதியில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான நீர்க் குழாயில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.