சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிகப்பட்ட 2 துப்பாக்கிகளை பன்படுத்தி வேட்டையாடிய 4 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சுங்காவில், மெதிரிகிரி பகுதியைச் சேர்ந்த 34, 32, 43 மற்றும் 50 வயதுடைய 4 பேரையே கைது செய்து சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் வனஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்களை சோமாவதி காட்டுப் பகுதியில் மறை இறைச்சி 30 கிலோவுடன் கைது செய்துள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள், கோடாரி மற்றும் வெடி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் மறை ஒன்றினை வேட்டையாடி 30 கிலோ இறைச்சியை கொண்டு செல்வதற்கு முற்பட்ட வேளையிலே கைது செய்யப்பட்டதாகவும், சந்தேக நபர்களை சேருநுவர பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.