மட்டக்களப்பிலும் உண்ணாவிரத போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை!

இன்று (26) மட்டக்களப்பு கல்லடி முருகன் ஆலயத்தில் இடம்பெற இருந்த அமைதிப் பிரார்தனை மற்றும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ள நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

காத்தான்குடி பொலிஸாரின் முறைப்பாட்டையடுத்து மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியால் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராசா சரவணபவன், சாணக்கியன் எம்பி உள்ளிட்டோருக்கு இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.